தமிழக அரசின், “தொலைநோக்குத் திட்டம் -2023′ பத்து நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
BODY
* 2023ம் ஆண்டில், இந்தியாவிலேயே பொருளாதார ரீதியாக வளம் பெற்ற மாநிலமாக விளங்கும். தற்போதுள்ள தனிநபர் வருமானம் ஆறு மடங்காக உயர்ந்து, 11 ஆண்டுகளில், உலகளவில் உயர்நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு இணையாக இருக்கும்.
* தமிழகம் உள்ளடக்கிய வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தும். வறுமை இல்லாத மாநிலமாகவும், வேலைவாய்ப்பு வேண்டுவோருக்கு லாபமான வாய்ப்புகள் அளிக்கப்படும்.
* சமூக வளர்ச்சியில், இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே, அதிக மனிதவள குறியீடு கொண்ட மாநிலமாக திகழும்.
* வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு, எரிசக்தி, போக்குவரத்து, பாசனம், இணைப்புகள், சுகாதாரம் மற்றும் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்த உள்கட்டமைப்பு சேவைகளை தமிழகம் வழங்கும்.
* ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு விரும்பும் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இடம்பெறும். குறிப்பாக, இந்தியாவிலேயே மிகவும் விருப்பப்படும் மாநிலமாக இருக்கும்.
* இந்தியாவிலேயே, புதுமையை புகுத்துதலுக்கான மையம் மற்றும் அறிவுசார் தலைநகரமாக தமிழகம் கருதப்படும்.
* அனைத்து குடிமகன்கள் மற்றும் வர்த்தகத்துக்கு, அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை தமிழகம் உறுதி செய்யும். சுதந்திரமான போக்குவரத்து, கருத்துகள் பரிமாற்றம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் உலகத்துடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.
* தமிழகம் தனது சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து, கவனம் செலுத்தும்.
* இயற்கை சீற்றங்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் மனிதனால் ஏற்படும் இதர அம்சங்களால் ஏற்படும் நிலையற்ற தன்மையில் இருந்து மாநிலத்தையும் மக்களையும் பாதுகாக்க தமிழகம் நடவடிக்கை எடுக்கும்.
* நிர்வாகத்தில் வெளிப்படையான மற்றும் பதிலளிக்கக் கூடிய கலாசாரத்தை தமிழகம் பின்பற்றும். அனைவருக்கும் பாதுகாப்பு, சம வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.