டிஎன்பிஎஸ்சி சமீபத்திய அறிவிப்பின்படி குரூப்-2 தேர்வானது மே மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது.
எவ்வளவு காலிப்பணியிடங்கள்?
ஒருங்கிணைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு என்பதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
[the_ad id=”6240″]
என்னென்ன பணியிடங்கள் உள்ளன?
நகராட்சி ஆணையர், லேபர் இன்ஸ்பெக்டர், கூட்டுறவுத்துறையில் இன்ஸ்பெக்டர் போன்ற வெவ்வேறு துறைகளில் 3000+ பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
எவ்வாறு தயார் செய்வது?
குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்து கொள்ளவும். பாடத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிற்கும் தமிழக அரசின் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்தும் வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிடும் குறிப்புகளில் இருந்தும் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
[the_ad id=”6240″]
முதல்நிலைத் தேர்வு preliminary examination
பொது அறிவு படங்களை தயார் செய்வதற்கு பள்ளி பாடப் புத்தகங்கள் போதுமானதாகும். நடப்பு நிகழ்வுகளுக்கு செய்திதாள்களையோ அல்லது ஏதேனும் பயிற்சி மையங்கள் வெளியிடும் மாதாந்திர தொகுப்புகள் போதுமானதாகும். கணித பகுதிக்கு அடிப்படை கணித புரிதல் போதுமானதாக இருக்கும்.
எத்தனை கட்டங்களாக தேர்வு நடைபெறும்?
புதிய அறிவிப்பின்படி Group-2 தேர்வானது மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. முதல் நிலையில் குறிக்கோள் வகை வினாக்களும், இரண்டாம் நிலையில் விரிவான விடை அளிக்கும் வகையிலும்,மூன்றாவது நிலை நேர்முக தேர்வாக இருக்கும்.
[the_ad id=”6240″]
அறிவிப்பு வெளியிடப்படும் நாள் : மே மாத இறுதியில்
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
தேர்வு நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் : விரைவில் அறிவிக்கப்படும்
குரூப்-2 தேர்வை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவித்தால் அதற்கான விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும்.