தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030 பற்றி எழுதுக. / Tamil Nada disaster management policy 2018

REFERENCE

TAMIL

ENGLISH

ENGLISH

INTRODUCTION 
தமிழகத்தில் பெருவெள்ளம், சுனாமி, புயல் போன்ற பேரிடர்களால் உயிர்பலியுடன், பெரும் கட்டமைப்புகளும் சேதமடைகின்றன. இதையடுத்து, தமிழக பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
BODY
  • தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 – 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர் துயர் துடைப்புக்காக 4 இலக்கு கள், 7 பரிந்துரைகளுடன் உரு வாக்கப்பட்ட சென்டாய் கட்ட மைப்பு திட்டத்தின்படி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது தவிர ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள்- 2030, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந் தத்தில் குறிப்பிடும் முன்னுரிமை மற்றும் இலக்குகள் இதில் உள்ளன.
  • மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2016, பேரிடர் அபாய தணிப்பு குறித்து ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட 10 அம்ச செயல் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில், தமிழகம் பற்றிய குறிப்பு, பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடு, அதன் தணிப்புக்கான இயற் கையை ஒட்டிய முறையான அணுகுமுறைகள், நிர்வாக கட்டமைப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முறைகள், அபாயங் களைத் தடுக்க மற்றும் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
  • இவை தவிர, பேரிடர்களின் போது இழப்பீடு வழங்குதல், மறு வாழ்வு, பாதிப்புகளைச் சீரமைத் தல், பேரிடர் அபாயத் தணிப்பை அடிப்படையாகக் கொண்டு மாநிலத்தின் இதர வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுதல், அத்திட்டங்களை நெறிப்படுத்துதல், நிதி ஆதாரங்கள், தொலைநோக்குத் திட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி இத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது
CONCLUSION 
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.