சென்னையில் நடந்த 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகளை பட்டியலுடுக./ LIST OUT THE MERITS OF SECOND GLOBAL INVESTOR MEET IN TAMIL NADU.

 

 

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

TAMIL

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

தமிழ்நாட்டை தொழிற்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில்ஜனவரி 23 மற்றும் 24, 2019 தேதிகளில் நடத்தப்பட்டது.

BODY

1.உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புதிதாக மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.[the_ad id=”2159″]

2.இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது இதன் மூலம் மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய் முதலீடுகள் வரவிருக்கிறது. இதன் மூலம் 10 லட்சத்து 50 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

3.நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகப் பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் 27,500 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாகவும் ஹுண்டாய் கார் நிறுவனம் 7,000 கோடி ரூபாயை விரிவாக்கப் பணிகளில் முதலீடு செய்யவிருப்பதாகவும் மின்சாரக் கார்களைத் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

4.எம்ஆர்எஃப் நிறுவனம் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போதுள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 2,500 கோடி ரூபாயை முதலீடுசெய்யுமென்றும் அதானி நிறுவனம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய பத்தாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் பிஎஸ்ஏ ஃப்ரான்ஸ் நிறுவனம் பிஜோ கார்களைத் தயாரிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 1,250 கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்றும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.